சட்டைக் காலரில் உள்ள அழுக்கு, எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக
மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம்
சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்.
,நிச்சயமாக மறைந்து போகும். அது எப்படி ? சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு
வேதியல் பொருளைத் தான் நாம் தினமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த
சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி
சாப்பிடாதவர்கள்யார்தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும்
காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை, சீனி ஒரு
ஊடுபொருளாக நம் உடம்புக்குள் செல்கிறது.இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார்
செய்கிறார்கள்? என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால், இனி
சீனியை தொடக்கூட மாட்டீர்கள்.குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய
என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்…..
1.கரும்பிலிருந்துசாறு பிழியப்படும் நிலையில், பிளிச்சிங் பவுடர் அல்லது
குளோரின் எனப்படும் கெமிக்கலை “புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக”
பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் சூட்டில்,
“பாஸ்போரிக் ஆசிட்” லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலக்கப்படுகிறது. இந்த
இடத்தில் “பாஸ்போரிக் ஆசிட்,” அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து “சல்பர்-டை-ஆக்சைடு” வாயுவையும் செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்துவதால், நல்ல விட்டமின்கள்
இழப்பு ஆகி விடுகிறது. இந்த நிலையில், செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு
அதிகமாக சேர்க்கப்படுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்றவை பிரித்து எடுக்கப்பட்ட பின், தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக்சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும், சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க
படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு, நஞ்சு சீனியில்
கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும்
கரியே. சீனி தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கு பிந்திய சீனிகளை
சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம்,
மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.குடலில்மட்டுமல்ல,
பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும்
சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரியவியாதிகள் அனைத்துக்கும் இதுதான்
பிரதான காரணியாக அமைகின்றது.
No comments:
Post a Comment