Tuesday, December 8, 2015
பொதுஅறிவு குறிப்புக்கள் தெரிந்துகொள்வோம்
* பருவநிலை மாற்றங்கள் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பறவைகளின் பறக்கும் வேகமும் கூடியுள்ளது.
* பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் கணக்கிட்டால் தலா 20 கோடி பூச்சிகள் உள்ளன!
* தெள்ளுப்பூச்சியால் (Flea) உணவில்லாமல் 100 நாட்கள் வரை வாழ முடியும்!
* பச்சோந்தியால் தன் மனநிலைக்கு ஏற்பவும் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும்.
* புலியால் ஒரேமுறை 27 கிலோ தீனியை உள்ளே தள்ள முடியும்.
* பழுப்பு வௌவாலால் ஒரு மணி நேரத்தில் கொசு அளவிலுள்ள 1,200 பூச்சிகளைத் தின்ன முடியும்!
* கொரில்லாக்களும் எலிகளும் அதிக ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக, தம் கழிவையே தின்னுவதுண்டு.
* நீலத்திமிங்கலம் போகிற போக்கிலேயே பிரமாண்ட மீன் கூட்டங்களை உறிஞ்சி விழுங்கி விடும். ஒரு நாளைக்கு சுமார் 4 டன்!
* நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை 600 கிலோ. அதன் முக்கிய ரத்த நாளத்தின் வழியே ஒரு மனிதர் புகுந்து வர முடியும்!
* பூச்சிகளால் தங்கள் உயரத்தைக் காட்டிலும் 80 மடங்கு வரை தாவ முடியும். இது ஆறடி மனிதன் 480 அடி உயரம் தாண்டுவதற்கு நிகரானது!
* சராசரி ஆப்ரிக்க யானையின் எடை 10 ஆயிரம் கிலோ. இந்திய யானையின் எடை சுமார் 5,400 கிலோதான்!
* பாம்புகளின் விஷச்சுரப்பிகளைக்கூட விட்டு வைக்காமல் விழுங்கி விடும் திறமை கீரிகளுக்கு உண்டு!
ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு இடப்பெயர்ச்சி செய்வது கில்லர் திமிங்கலங்களின் வழக்கம்.
* பனிக்கரடிகளின் ரோமம் நிறமற்றது. சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் அவை வெண்மையாகத் தோன்றுகின்றன.
* கோழியின் கல்லீரலைப் பயன்படுத்தி ‘ஏ’ குரூப் ரத்தத்தை ‘ஓ’ குரூப் ரத்தமாக மாற்ற முடியும்.
* நாய்களில் டால்மேஷனுக்கு மட்டும் மூட்டு நோய்கள் ஏற்படக்கூடும்
* முட்டைக்குள் உருவாகும் கோழிக்குஞ்சுகளால், மேல் ஓட்டின் வழியாக சுவாசிக்க முடியும்
* ஸ்லோத் என்ற குரங்கு போன்ற ஒருவகை உயிரினம் ஒரு மைல் தூரத்தைக் கடப்பதற்கு ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும்
* உடலியல் ரீதியாக, சிங்கத்தை விட நீர் யானை அபாயமானது.
* சில பெண் மீன்களால் ஆணாக மாற முடியும்!
* சிலந்தியின் சின்னஞ்சிறு உடலின் 80 சதவீதம் பகுதி மூளைகளால் நிரப்பப்பட்டுள்ளது.
* ஆமைகள் பின்பக்க துளை வழியாக சுவாசிக்கின்றன.
* தெள்ளுப்பூச்சி தன்னைவிட 130 மடங்கு உயரம் வரை தாண்டும் திறன் கொண்டது!
* நிறைய மின்மினிப்பூச்சிகளை விழுங்கிவிட்டால், அந்தத் தவளையும் சிறிதுநேரம் மினுமினுக்கும்!
* பூனைகளுக்கு சுவை உணரும் சக்தி குறைவு. அவற்றுக்கு 473 சுவை மொட்டுகள்தான். மனிதர்களுக்கோ சராசரியாக 8 ஆயிரம்!
* காகங்களால் தங்களை மோசமாக நடத்திய மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்!
* 2012ல் மட்டுமே 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரையிலான புதிய உயிரிகள் அறியப்பட்டிருக்கின்றன. 795 இனங்களை இழந்திருக்கிறோம்.
* 25 ஆயிரம் பூச்சிகள், உண்ணிகள், சிலந்திகளுக்கு ஒரே ஒரு கிறிஸ்துமஸ் மரமே இடம் கொடுக்க முடியும்!
* காலபோகஸ் தீவில் இருக்கும் ஒரு ஆமை இனம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும்.
* இதுவரை அறியப்பட்டதில் ஒரே முட்டையில் 9 மஞ்சள் கருக்கள் வரை இருந்துள்ளன
* பூனைகளைவிட மனிதர்களுக்கு 20 மடங்கு சுவை உணர்வு அதிகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment