* பருவநிலை மாற்றங்கள்
காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பறவைகளின்
பறக்கும் வேகமும் கூடியுள்ளது.
* பூமியில்
உள்ள ஒவ்வொருவருக்கும் கணக்கிட்டால் தலா 20
கோடி
பூச்சிகள் உள்ளன!
* தெள்ளுப்பூச்சியால்
(Flea) உணவில்லாமல் 100 நாட்கள் வரை வாழ
முடியும்!
* பச்சோந்தியால்
தன் மனநிலைக்கு ஏற்பவும் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும்.
* புலியால்
ஒரேமுறை 27 கிலோ தீனியை உள்ளே
தள்ள முடியும்.
* பழுப்பு
வௌவாலால் ஒரு மணி நேரத்தில் கொசு அளவிலுள்ள 1,200
பூச்சிகளைத்
தின்ன முடியும்!
* கொரில்லாக்களும்
எலிகளும் அதிக ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக,
தம்
கழிவையே தின்னுவதுண்டு.
* நீலத்திமிங்கலம்
போகிற போக்கிலேயே பிரமாண்ட மீன் கூட்டங்களை உறிஞ்சி விழுங்கி விடும். ஒரு
நாளைக்கு சுமார் 4 டன்!
* நீலத்திமிங்கலத்தின்
இதயத்தின் எடை 600 கிலோ. அதன்
முக்கிய ரத்த நாளத்தின் வழியே ஒரு மனிதர் புகுந்து வர
முடியும்!
* பூச்சிகளால்
தங்கள் உயரத்தைக் காட்டிலும் 80
மடங்கு
வரை தாவ முடியும். இது ஆறடி மனிதன் 480 அடி உயரம் தாண்டுவதற்கு நிகரானது!
* சராசரி
ஆப்ரிக்க யானையின் எடை 10
ஆயிரம்
கிலோ.
இந்திய யானையின் எடை சுமார் 5,400 கிலோதான்!
* பாம்புகளின்
விஷச்சுரப்பிகளைக்கூட விட்டு வைக்காமல் விழுங்கி விடும் திறமை கீரிகளுக்கு உண்டு!
ஆயிரம் கிலோ மீட்டர்
தூரத்துக்கு இடப்பெயர்ச்சி செய்வது கில்லர் திமிங்கலங்களின் வழக்கம்.
* பனிக்கரடிகளின்
ரோமம் நிறமற்றது. சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் அவை
வெண்மையாகத் தோன்றுகின்றன.
* கோழியின்
கல்லீரலைப் பயன்படுத்தி ‘ஏ’ குரூப்
ரத்தத்தை ‘ஓ’ குரூப் ரத்தமாக மாற்ற
முடியும்.
* நாய்களில்
டால்மேஷனுக்கு மட்டும் மூட்டு நோய்கள் ஏற்படக்கூடும்
* முட்டைக்குள்
உருவாகும் கோழிக்குஞ்சுகளால்,
மேல்
ஓட்டின் வழியாக சுவாசிக்க முடியும்
* ஸ்லோத்
என்ற குரங்கு போன்ற ஒருவகை உயிரினம்
ஒரு
மைல் தூரத்தைக் கடப்பதற்கு ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும்
* உடலியல் ரீதியாக, சிங்கத்தை விட நீர்
யானை அபாயமானது.
* சில
பெண் மீன்களால் ஆணாக மாற முடியும்!
* சிலந்தியின்
சின்னஞ்சிறு உடலின் 80
சதவீதம்
பகுதி மூளைகளால் நிரப்பப்பட்டுள்ளது.
* ஆமைகள் பின்பக்க துளை வழியாக சுவாசிக்கின்றன.
* தெள்ளுப்பூச்சி
தன்னைவிட 130 மடங்கு உயரம் வரை
தாண்டும் திறன் கொண்டது!
* நிறைய மின்மினிப்பூச்சிகளை விழுங்கிவிட்டால், அந்தத் தவளையும்
சிறிதுநேரம் மினுமினுக்கும்!
* பூனைகளுக்கு சுவை உணரும் சக்தி குறைவு. அவற்றுக்கு
473 சுவை மொட்டுகள்தான். மனிதர்களுக்கோ
சராசரியாக 8 ஆயிரம்!
* காகங்களால்
தங்களை மோசமாக நடத்திய மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்!
* 2012ல் மட்டுமே 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரையிலான
புதிய உயிரிகள் அறியப்பட்டிருக்கின்றன. 795 இனங்களை இழந்திருக்கிறோம்.
* 25 ஆயிரம்
பூச்சிகள், உண்ணிகள், சிலந்திகளுக்கு ஒரே
ஒரு கிறிஸ்துமஸ் மரமே இடம் கொடுக்க முடியும்!
* காலபோகஸ்
தீவில் இருக்கும் ஒரு ஆமை இனம் 200
ஆண்டுகளுக்கும்
மேலாக வாழும்.
* இதுவரை அறியப்பட்டதில் ஒரே முட்டையில் 9 மஞ்சள் கருக்கள் வரை
இருந்துள்ளன
* பூனைகளைவிட
மனிதர்களுக்கு 20 மடங்கு சுவை உணர்வு
அதிகம்.
No comments:
Post a Comment